![]() |
![]() |
கத்தோலிக்க திருசபையினூடாக ஊவா மாகாணத்தின் பதுளை மாநகரத்தின் மையத்தில் பல பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவற்றுள் ஒன்றாக ஆண் பெண் இருபாலாருக்கும் ஆரம்ப கல்வியை வழங்கிய ஒரு பாடசாலையாகவும் ஆங்கில மொழிமூல கல்வியை வழங்கிய ஒரு பாடசாலையாகவும் புனித உர்சலாஸ் கான்வென்ட் என்ற பாடசாலை அமைந்திருந்தது. சமூகத்தில் வசதிப்படைத்த பெற்றோர்களின் பிள்ளைகள் இங்கு கல்வசி கற்றனர்.1933ம் ஆண்டில் இது ஒரு மும்மொழி பாடசாலையாக விளங்கியது. மடத்துத் தலைவியான மோட் (Mother Maude) என்பவர் பாடசாலையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்தார். அவரைத் தொடர்ந்து அருட் சகோதரி ஆன் (Sister Anne) பாடசாலையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுதடாத்தி வந்த காலப் பகுதியில் இடைநிலை பாடசாலையாக இந்நிறுவனம் பரிணமித்தது.
